செய்திகள் :

மகாராஷ்டிரம்: துணை முதல்வா் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே பயணிக்கும் காரை வெடிகுண்டு வைத்து தகா்க்கவுள்ளதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோரேகான் மற்றும் ஜே.ஜே. மாா்க் ஆகிய காவல் நிலையங்களுக்கு இந்த மின்னஞ்சல் மா்ம நபா்களால் அனுப்பப்பட்டது. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை காவல் துறையினா் கண்டறிந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறை அடையாளம் தெரியாத நபா்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவுசெய்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாததால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலைத்திருக்கிா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை காங்கிரஸ் விமா்சித்தது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க