செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தல்: 5 மாதத்தில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ராகுல் கேள்வி

post image

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையிலான 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தனர்.

இதையும் படிக்க : தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ரெளத் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்து மகாராஷ்டிர தேர்தல் முரண்பாடுகள் குறித்து பேசினர்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

”மகாராஷ்டிரத்தில் போட்டியிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாங்கள் அமர்ந்துள்ளோம். வாக்காளர்கள் மற்றும் வாக்குப் பட்டியல் தொடர்பாக எங்கள் குழுக்கள் ஆய்வு நடத்தியுள்ளன. பல முரண்பாடுகளை கண்டறிந்துள்ளோம்.

2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் 2024 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் மட்டும் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில், புதிதாக சேர்க்கப்பட்ட 39 லட்சம் வாக்காளர்கள் யார்? இந்த எண்ணிக்கையானது ஹிமாசல் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு சமம். மகாராஷ்டிரத்தில் வாக்கு செலுத்தும் வயதுடைய மொத்த மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. திடீரென வாக்காளர்கள் உருவானது எப்படி?

எங்களுக்கு மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான வாக்காளர் பட்டியல் தேவை, அவர்களின் பெயரும் முகவரியும் தேவை. புதிய வாக்காளர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

பல வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், ஒரு வாக்குச்சாவடியில் இருந்து மற்றொரு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களின் தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தினரே அதிகம்.

தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. பதிலளிக்காததற்கு ஒரே காரணம், அவர்களின் செயலில் தவறு இருப்பதுதான். குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. தரவுகளை தெளிவாக வழங்குகிறோம்” என்றார்.

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்ப... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.வந்தே பாரத் ரயிலில்... மேலும் பார்க்க

500 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விக்ரம் மிஷ்ரி கூறுகையில், “பிரதமர்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாளே உள்ள நிலையில். ஆம் ஆத்மி கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்தார். தில்ல... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க