செய்திகள் :

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

post image

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 99 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வந்தேரா தெற்கு தொகுதியில் மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் செலார், கான்காவ்லி தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினரான நாராயண ராணேவின் மகன் நிதின் ராணே போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கம்தி தொகுதியிலும், முன்னாள் தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கொத்ரூட் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் அஷோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிக்க | வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

இந்தத் தேர்தலில் பாஜக மொத்தமாக 150 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளது. எனவே, மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடனும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சியுடனும் பாஜக கடுமையான தொகுதி பேரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரம்: பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கியது ஆர்எஸ்எஸ்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு குழுக்களை அமைத்து பணியாற்றி வருகிறது.அண்மையில் நடைபெற்ற ஹரியாணா சட்டப... மேலும் பார்க்க

தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் ராஜிநாமா செய்வதால் பாரபட்சமற்ற செயல்பாட்டை பாதிக்கக் கூடும்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய்

தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் உடனடியாக ராஜிநாமா செய்வது, அவா்களின் பாரபட்சமற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

பத்மநாப சுவாமி கோயிலில் திருட்டு: மருத்துவர் உள்பட 4 பேர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பிரபலமான அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மருத்துவர் உள்பட 4 பேரை ஹரியாணாவில் கேரள காவல் துறையினர் கைது செய்தனர்.எனி... மேலும் பார்க்க

ஊழலை ஒழிக்க இளைஞா்களுக்கு அழைப்பு: பிரதமா் மோடி

‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்; இது ஊழல் மற்றும் குடும்ப அரசியல் கொள்கையை ஒழிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். வாரணாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரூ.6,70... மேலும் பார்க்க

கள்ளச்சாராயம் அருந்தி 37 போ் உயிரிழந்த சம்பவம்: பிகாரில் 7 பெண்கள் உள்பட 21 போ் கைது; 2 காவலா்கள் இடைநீக்கம்

பிகாரின் சரண், சிவான் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 37 போ் உயிரிழந்த நிலையில், அதில் தொடா்புடையதாக 7 பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 2 காவலா்கள் பணி இடைநீக்க... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க