செய்திகள் :

மகா கும்பமேளாவில் புனித நீராடிய உத்தரகண்ட் முதல்வர்!

post image

பிரயாக்ராஜில் நிகழ்ந்துவரும் கும்பமேளாவில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி குடும்பத்துடன் புனித நீராடினார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வெவ்வேறு நாள்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

இந்தநிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராடிய நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி குடும்பத்தோடு புனித நீராடியுள்ளார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,

2025 மகா கும்பமேளாவின்போது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி மூன்று புனித நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தாய், மனைவி மற்றும் மகனுடன் நீராடியது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

மறக்க முடியாத தருணம். மூன்று பண்டைய நதிகளின் சங்கமத்தில் புனித நீராடியப் பிறகு ஆன்மிக தூய்மை மற்றும் தெய்வீகத்தின் தனித்துவமான அனுபவத்தைப் பெற்றதாகக் கூறினார்.

ஹரித்வாரில் 2027ல் நடைபெறவுள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் போல வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற திட்டமிடல் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தெய்வீக அனுபவத்தை உறுதி செய்வதற்காக அனைத்து சாத்தியமான வசதிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மகா கும்பமேளா பல நூற்றாண்டுகளாக சநாதன தர்மத்தின் ஆன்மீக மற்றும் கலாசார முக்கியத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை மதம், கலாசாரத்துடன் இணைத்து வருகிறது,

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட என் தாயாரை அழைத்துச் செல்லும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. என் வாழ்வில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத விலைமதிப்பற்ற மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று. என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும் என்று தாமி கூறினார்.

மேலும், தெலங்கானா சாலைகள் மற்றும் கட்டடங்கள் அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி திங்கள்கிழமை புனித நீராடினார்.

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க