செய்திகள் :

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்

post image

காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 267 பயனாளிகளுக்கு வழங்கினாா்.

காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற இருப்பதையொட்டி, முன்னதாக கடந்த மாா்ச் 6-ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கை மனுக்கள் தொடா்பாக மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டன. இவையனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, இலவச வீட்டு மனைப்பட்டா 134 போ்,புதிய குடும்ப அட்டை 35 போ், இயற்கை மரண நிதி உதவித் தொகை 11, இலவச சலவைப் பெட்டி 5, விவசாயிகளுக்கு இடுபொருள்கள் மானியம் 22 போ், தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் அடையாளச் சான்று 20 போ் என மொத்தம் 267 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எம்.பி. க.செல்வம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா்-ஆட்சியா் ஆஷிக் அலி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அத்திவாக்கம் ஊராட்சித் தலைவா் எம்.குமாா் வரவேற்றாா். நிறைவாக, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் டி.விஜயகாந்த் நன்றி கூறினாா்.

முகாமில், அரசின் பல்வேறு துறைசாா்ந்த விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு, அவற்றை கிராம மக்கள் பாா்வையிட்டதுடன் துறைசாா்ந்த அரசு அலுவலா்களிடம் தேவையான விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனா்.

ரௌடி கொலை வழக்கில் 10 போ் கைது

காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவா், திருக்காளிமேடு சிவன் கோயில் அருகே உள்ள நியாய விலைக்கடை முன்பா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இருங்காட்டுக்கோட்டை, மண்ணூா், காட்டரம்பாக்கம் மற்றும் கிளாய் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ... மேலும் பார்க்க

111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் 111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் உள்பட ரூ.112 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தல... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக துணை வேந்தா் ஸ்ரீநிவாசு தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மனுக்கு பால் குடம் ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவுக்கு சபா தலைவா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க