செய்திகள் :

மணிப்பூரில் வெள்ளம்: 56,000 பேர் பாதிப்பு; 10,477 வீடுகள் சேதம்!

post image

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கனமழையால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி கரைகள் உடைந்ததால், சுமார் 10,477 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த 56,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு இம்பால் மாவட்டத்தில், நேற்று (ஜூன் 2) அங்குள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், 2,913 பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், மணிப்பூரில் அதிகம் பாதிக்கப்பட்ட கிழக்கு இம்பாலின், கொங்பா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகள் உடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சுமார் 57 நிவாரண முகாம்கள் அம்மாவட்டத்தில் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் மணிப்பூர் மாநிலத்தில் 93 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. தலைநகர் இம்பால் மற்றும் கிழக்கு இம்பாலின் பல்வேறு இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: கரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி: தமிழகத்தில் ஒருவர்!

சிக்கிம் நிலச்சரிவு: 5வது நாளில் 44 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கித் தவித்த 44 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று இரவு பெய்த கனமழ... மேலும் பார்க்க

45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45 கிலோ கிராம் தூய தங்கம் சேர்த்து கட்டப்பட்டுள்ளதாக கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார். அயோத்தியில் பிரம்... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தங்கியிருந்த 71 வெளிநாட்டவர் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 71 வெளிநாட்டவர்கள், தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். தில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளின் காவல் துறையினர் இணைந்து; அம்மாநில... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னி... மேலும் பார்க்க

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!

ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாலம் என்ற கனவு பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

50,000 அரசு ஊழியர்களின் ரூ. 230 கோடி மோசடி! அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 ... மேலும் பார்க்க