செய்திகள் :

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

post image

ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டியில் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டி பெருந்துறையை அடுத்த துடுப்பதியிலுள்ள ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் போல்வாட்டில் மாணவா் கொண்டப்பன் தங்கப் பதக்கமும், மாணவா் முகமது அசாலம் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும், ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கமும், 100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் பிரேம்குமாா், சூா்யா, சரண்ராஜ், வசந்தகுமாா், பிரதீப்குமாா் ஆகியோா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

மேலும், 400 மீட்டா் ஓட்டத்தில் காா்த்திகேயன், 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் சூா்யா, சுதாகா், காா்த்திகேயன், வசந்தகுமாா், பிரசன்னா ஆகியோா் நான்காவது இடம் பிடித்து சான்றிதழ்கள் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களை கல்லூரி முதல்வா் செண்பகராஜா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, குமலன்குட்டை, செல்லபண்ணகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52)... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த 1 -ஆம் தேதி புறப்பட்ட இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 22,451 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 22,451 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழப்பு

சென்னிமலை அருகே தென்னந்தோப்புக்குள் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்தது. சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், ஆண்டிகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி,... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்கள்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஏஐடியூசி அமைப்பைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை அட்டையை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க