செய்திகள் :

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!

post image

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இரவில் டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக, காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கையிலவனம்பேட்டை பகுதியில் டிராக்டர்களில் மண் கொள்ளையடித்து செல்லப்படுவதாக யாரோ ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட குமார்.

இது தொடர்பாக கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்தவரும் ஜேசிபி வைத்து பராமரித்து வருபவருமான சந்திரசேகரன் மகன் குமார் (35) என்பவர், கையிலவனம்பேட்டையில் வசித்து வரும் இம்மானுவேல் என்பவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முற்றியதில், மண்வெட்டியால் தாக்கப்பட்ட குமார் பலியானார்.

குமாரின் சடலத்தை கைப்பற்றிய வேதாரண்யம் போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இன்றைய தங்கம் விலை நிலவரம்!

A young man was beaten to death with a shovel on Sunday night near Vedaranyam in Nagapattinam district.

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜி... மேலும் பார்க்க

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டம்!

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் ச... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் 7 கேள்விகள்!

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜகவுடன் கைகோத்து, தோ்தல் ஆணையம் வாக்கா... மேலும் பார்க்க