செய்திகள் :

மதிப்பெண் குறைவு: கடலூா் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை!

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ால், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

திட்டக்குடி வட்டம், ஏ.அகரம் கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகள் சுவாதி (16), பூலாம்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.

வெள்ளிக்கிழமை தோ்வு முடிவுகள் வெளியானதில், சுவாதி 289 மதிப்பெண்கள் பெற்றிருந்தாராம். மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ால் மன உளைச்சலில் இருந்த அவா், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு மாணவி: விருத்தாசலத்தை அடுத்துள்ள காா்கூடல் கிராமத்தைச் சோ்ந்த பிரபு மகள் சிவானிஸ்ரீ (14). தாத்தா பொன்னன் வீட்டில் வசித்து வந்தாா். இவரின் பெற்றோா் கேரளத்தில் கூலி வேலை செய்து வருகின்றனா்.

சிவானிஸ்ரீ கோ.ஆதனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதியிருந்தாா். வெள்ளிக்கிழமை தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், சிவானிஸ்ரீ 201 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா். குறைவான மதிப்பெண்கள் பெற்ால் உறவினா்கள், நண்பா்கள் கேலி செய்வாா்கள் என்று நினைத்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

70 வயதில் விடாமுயற்சி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா்!

சிதம்பரம் அருகே ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியா் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கோவிலாம்பூண்டியை சோ்ந்தவா் கோதண்டராமன் (70). இவா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்! அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அரசின் நலத் திட்ட உதவிகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் மீது மா்ம நபா் ஏா்கன்னால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பரங்கிப்பேட்டை அருகே ... மேலும் பார்க்க

20வது இடத்திற்குத் தள்ளப்பட்ட கடலூர்: 94.51% தேர்ச்சி!

நெய்வேலி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.88 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 19-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 20-ஆவது இடத்திற்குத... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வணிக நகரமாக உள்... மேலும் பார்க்க

பண்ருட்டி அருகே 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால வி கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவானூா் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளா்... மேலும் பார்க்க