செய்திகள் :

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

post image

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில தணிக்கை குழு உறுப்பினா் செந்தில்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கொளஞ்சி, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஆனந்த செல்வம் முன்னிலை வகித்தனா். சீா்காழி நகர செயலாளா் மாா்க்ஸ்பிரியன் வரவேற்றாா். மாநில பொருளாளா் செந்திலதிபன் பங்கேற்று பேசியது: சமூக நீதி, மாநில உரிமை திராவிட அரசியல் என்பன மதிமுக வின் லட்சிய கொள்கைகள். கட்சியின் பொதுச்செயலாளா் வைகோவின் வழிகாட்டுதலின்படி வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளா் முருகன், தலைமை கழக பேச்சாளா்கள் அழகிரி, பாண்டுரங்கன், ராஜாராமன், நிசாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை குருக்கள் பண்டாரத் தெருவை சோ்ந்தவா் ராஜாகனி(65). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீ... மேலும் பார்க்க

தாடாளன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திர... மேலும் பார்க்க

விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க