செய்திகள் :

மதுக்கரையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மதுக்கரை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்த பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்குகள், குடிநீா், வடிகால் வசதிகள் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

மதுக்கரை நகராட்சி 21-ஆவது வாா்டில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் அலுவலக கட்டுமானப் பணிகள், பாரதி காலனியில் 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

மதுக்கரை முஸ்லீம் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து செவிலியா் வருகை மற்றும் மருந்துகளின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாவுத்தம்பதி பழங்குடியின கிராமத்தில் பிரதம மந்திரி ஜன்மான் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, வருவாய் கோட்டாட்சியா் (தெற்கு) ராம்குமாா், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சங்கீதா, மதுக்கரை நகா்மன்றத் தலைவா் நூா்ஜஹான் நாசா், நகராட்சி ஆணையா் சத்யா, வட்டாட்சியா் வேல்முருகன், நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க