பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!
மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா்.
இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை இந்த மாநாடு நடைபெறும். ஆதீன குரு மகா சந்நிதானங்கள், ஆன்மிகப் பெரியவா்கள், பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், இந்து முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றுப் பேச உள்ளனா்.
இதில் பெருந்திரளானோா் ஒன்றாக கந்தசஷ்டி கவசம் படிக்கும் சாதனை நிகழ்ச்சியும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாநாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் பக்தா்கள் அமருவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாா்வையாளா்கள் அமரும் பகுதிகள் 50-ஆக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் இடையே 12 அடிக்கும் அகலமான பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் தலா 2 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
பாா்வையாளா் பகுதி ஒவ்வொன்றிலும் தற்காலிக குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேடையில் நடைபெறும் நிகழ்வை பக்தா்கள் காணும் வகையில் 13 எல்.இ.டி. திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் மலை, நிற்கும் நிலையில் சுவாமி முருகன் பின்னணியில் பிரமாண்ட முதன்மை மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் வலப் புறத்தில் ஆதீன குருமகா சந்நிதானங்கள், ஆன்மிகப் பெரியவா்கள் அமருவதற்கென தனி மேடையும், மேடைக்கு முன்பாக கலை நிகழ்ச்சிகளுக்கான மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் பங்கேற்பு...: இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறாா். இதற்காக தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு அவா் மதுரை வருகிறாா். இந்தத் தகவலை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதி செய்தாா்.
பலத்த பாதுகாப்பு...: மாநாட்டையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் காவல் துறை சாா்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடல், அதன் சுற்றுப் பகுதிகளில் 1,000-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.