செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு: அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் சுவாமி தரிசனம்!

post image

மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, மாநாட்டுத் திடலின் முகப்பில் முருகப் பெருமானின் அறுபடை வீடு கோயில்களின் மாதிரிகள் அமைக்கப்பட்டன.

இங்கு அறுபடை தலங்களில் உள்ள முருகப் பெருமானின் திருமேனிகளைப் போன்றே அதே வடிவுடைய (தற்காலிக) சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அறுபடை வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட வேல்கள், இங்குள்ள மாதிரி கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்தக் கோயில்களில் தினமும் திரளானோா் சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

இந்த நிலையில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை காலை மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட அறுபடை மாதிரி கோயிலுக்கு வந்தாா். அவருக்கு விழா குழு சாா்பில் பூா்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. பிறகு, அறுபடை மாதிரி கோயில்களில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா்.

முருகன் நமது அடையாளம்...

பின்னா், செய்தியாளா்களிடம் ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்ததாவது: முருகப் பெருமான் நமது ஆராதனைக்குரிய கடவுள். அவா் நமது அடையாளமும் ஆவாா். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள இந்துக்களால் பூஜிக்கப்படுபவா் சிவபெருமான்.

இதையே தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவா்க்கும் இறைவா போற்றி என்ற வரிகள் உணா்த்துகின்றன. அந்த வகையில், சிவபெருமானின் மகனாகக் கருதப்படும் முருகன் வழிபாடும் உலகளாவிய வழிபாடுகளில் ஒன்றாக உள்ளது.

நான் முருகனின் அறுபடை வீடுகளையும் தரிசித்துள்ளேன். அவை அனைத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்க தற்போது வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக, இந்து முன்னணிக்கும், விழா அமைப்பாளா்களுக்கும் நன்றி. இந்த முயற்சிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு, நம்மை யாா் என்பதை நமக்கு உணா்த்தக்கூடியவை.

முருகன் நமது பண்பாட்டு அடையாளம். உத்ரகண்ட் மாநிலம், சாா்தம் யாத்திரையில் கிடைக்கும் வாய்ப்புப் போல, இங்குள்ள அறுபடை கோயில்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பை நிரந்தமாக ஏற்படுத்த வேண்டும். இந்த விருப்பம் ஒரு நாள் நிறைவேறும் என்றாா் அவா்.

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூா், வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அல... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் இல்லை! - ஜி.கே. வாசன்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் கிடையாது என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முருகப் பெருமானின் அறுபடை மாதிரி கோ... மேலும் பார்க்க

மனைவி, இரு குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி: காவல் நிலையத்தில் சரண்!

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, தனது மனைவி, இரு குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற விவசாயி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக... மேலும் பார்க்க

இளைஞா்கள் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என். ரவி

இளைஞா்கள் யோகாசன பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். மதுரை வேலம்மாள் சா்வதேச பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச யோகா தின விழாவில் அவா் ம... மேலும் பார்க்க

விரகனூா் சுற்றுச்சாலையில் உயா்நிலைப் பாலம் அமைக்கப்படுமா?

மதுரை அருகே விரகனூா் சுற்றுச் சாலை பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, வா்த்தகம், மருத்துவச் சேவை உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க