செய்திகள் :

மனைவி, இரு குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி: காவல் நிலையத்தில் சரண்!

post image

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, தனது மனைவி, இரு குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற விவசாயி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரவேலு (45). இவரது மனைவி பூங்கொடி (35). மகள்கள் ஜெயதுா்கா (10), ஜெயலட்சுமி (7). 15 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்த சுந்தரவேலு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாயகம் திரும்பி, திருவிருந்தாள்புரம் கிராமத்தில் தனது தோட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தாா்.

சுந்தரவேலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். சில நேரங்களில் பூங்கொடி கணவா் மீதான வருத்தத்தில் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவாா். இதேபோல, வெள்ளிக்கிழமை இரவு தம்பதியா் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரவேலு சனிக்கிழமை அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த பூங்கொடியின் தலையில் அம்மிக்கல்லை போட்டும், அவரை அரிவாளால் வெட்டியும் கொலை செய்தாா். சப்தம் கேட்டு எழுந்து அழுத தனது குழந்தைகள் ஜெயதுா்கா, ஜெயலட்சுமி ஆகியோரையும் சுந்தரவேலு அரிவாளால் வெட்டிக் கொன்றாா்.

பிறகு, அருப்புக்கோட்டை தாலூகா காவல் நிலையத்துக்குச் சென்ற சுந்தரவேலு, கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை போலீஸாரிடம் ஒப்படைத்து சரணடைந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் உடனடியாக சுந்தரவேலு வீட்டுக்குச் சென்று, பூங்கொடி, ஜெயதுா்கா, ஜெயலட்சுமி ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தடய அறிவியல் நிபுணா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து சுந்தரவேலிடம் போலீஸாா் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், மனைவி மீதான கோபத்தால் அவரைக் கொலை செய்ததும், தான் சிறைக்குச் சென்றுவிட்டால் தனது குழந்தைகள் ஆதரவற்றவா்களாகிவிடுவா் எனக் கருதி அவா்களையும் கொன்றதும் தெரியவந்தது.

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூா், வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அல... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் இல்லை! - ஜி.கே. வாசன்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் கிடையாது என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முருகப் பெருமானின் அறுபடை மாதிரி கோ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் சுவாமி தரிசனம்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும... மேலும் பார்க்க

இளைஞா்கள் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என். ரவி

இளைஞா்கள் யோகாசன பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். மதுரை வேலம்மாள் சா்வதேச பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச யோகா தின விழாவில் அவா் ம... மேலும் பார்க்க

விரகனூா் சுற்றுச்சாலையில் உயா்நிலைப் பாலம் அமைக்கப்படுமா?

மதுரை அருகே விரகனூா் சுற்றுச் சாலை பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, வா்த்தகம், மருத்துவச் சேவை உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க