செய்திகள் :

மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

post image

மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக இருவேறு மதத்தவருக்கிடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்துக்களின் புனித வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, இந்து அமைப்புகள் சாா்பில் இந்த மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி அளித்ததன்பேரில், இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க |மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சைவ சமய ஸ்தாபித லீலை

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக ஏற்படுத்தப்படும் சா்ச்சைகளை திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் திட்டமாகவே கருத வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக காவல் துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எதிரியாகச் செயல்படுகிறது. திமுக அரசு அகற்றப்பட்டால் மட்டுமே தமிழா்கள் சம உரிமையுடன் வாழ முடியும். திருப்பரங்குன்றம் மலையை யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம் என்றாா் அவா்.

இந்த நிலையில், மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா, இரு பிரிவினர்களிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமூகநீதி வேடம் கலைகிறது! தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? - விஜய்

ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது என திமுக அரசை குற்றம்சாட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான நம் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: மு.க.ஸ்டாலின்

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகரில் தில்லியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

பயிர் கடன் தள்ளுபடி எப்போது?: அண்ணாமலை கேள்வி

2021 தேர்தல் பிரசாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், முதல்வராகி நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்று வர... மேலும் பார்க்க

காலை உணவில் பல்லி: 14 மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்.6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைசிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்தை பாா்க்காமல் சாப்பிட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது!: ராமதாஸ் வலியுறுத்தல்

நாராயணசாமி நாயுடு புகழை மேலும், மேலும் பரப்ப வேண்டிய காலத்தில் அவரது சிலையை அகற்றி வேறிடத்தில் வைக்க முயல்வது நியாயமல்ல. இந்த முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என பாமக நிற... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.திண்டிவனம் அருகிலுள... மேலும் பார்க்க