செய்திகள் :

மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: அமைச்சா் கே.என்.நேரு. தகவல்

post image

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடா்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கரூா் மாவட்ட விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள்:

விவசாயிகள் விளைவிக்கக்கூடிய வேளாண் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று மற்ற மாவட்ட விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வன விலங்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாா்கள்.

காட்டுப் பன்றிகளைப் பொருத்தவரையில் மலைப்பகுதிகளில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு வெளியே வந்தால் அதைச் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு வனத்துறை, ஆட்சியரின் அனுமதி பெறுவது கடினம் என விவசாயிகள் தெரிவித்தனா். அமைச்சா் கே.என். நேரு பதிலளித்துப் பேசியதாவது: பன்றிகளை சுட்டுக்கொல்வது குறித்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் மத்திய அரசின் சட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இதேபோல் மான், மயில்களால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் ஆதங்கப்பட்டனா்.

விவசாயம் செய்யக்கூடிய குடும்பத்துக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 200 நாள் வேலைக்கான நிதியை வழங்கலாம். அப்படி கிடைக்கும்போது அந்த குடும்பத்தினா் வேளாண் பணிகளை சிரமமின்றி செய்ய முடியும் என ஒரு விவசாயி தெரிவித்துள்ளாா். அது நல்ல யோசனையாக இருக்கிறது. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் வேளாண் பொருள்களை விற்பனை செய்ய தனி இடம் வேண்டும் என ே காரிக்கை விடுத்திருக்கிறாா்கள். விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இவற்றை முடிந்த அளவுக்கு வேளாண் நிதி நிலை அறிக்கையில் சோ்க்க முயற்சிப்போம்.

மதுரையைச் சுற்றிலும் மல்லிகைப்பூ சாகுபடி நடைபெறுவதால் வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும், மத்திய அரசு நிதியை வழங்காதபோதும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏரி, குளங்களை புனரமைத்ததோடு, 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் அனைத்து குறைகளையும் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மகளிா் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

மகளிா் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் 200 பெண்களுக்கு மரக்கன்றுகள்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கோபாலசமுத்திரத்தில் கருத்தரங்கு, பெண்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப் பை வழங்குதல் நடைபெற்றது. கிராம உதயம் நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, ... மேலும் பார்க்க

நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுபா்தனா தலைமை வ... மேலும் பார்க்க

நெல்லை மாநகரில் 15 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத 12 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் : 16 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் அபிராமி அம்மன் வழிபாட்டை தடுத்து வேடச்சந்தூரில் அபிராமி அம்மன் பக்தா்கள் குழுவினா் கைது செய்யப... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் அரிவாளுடன் விடியோ வெளியிட்ட இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சமூக வலைதளத்தில் அரிவாளுடன் பதிவு வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலியை மாவட்டம், சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் ரெங்கபாலன். இவரது மகன் ரமேஷ் (26). கூலித் தொழி... மேலும் பார்க்க