செய்திகள் :

``மதுரையை போல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் நடந்துள்ளது..'' - பாஜக அண்ணாமலை சொல்வதென்ன?

post image

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை தமிழகத்தில் அதிகளவு எழுதுகிறார்கள். இந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வு சரியில்லை. துணை ஜனாதிபதியாக தமிழர் அல்லது நல்லவர் யார் வந்தாலும் மகிழ்ச்சி.

அண்ணாமலை

என்னுடைய கட்சி பணிகளை ஒரு சதவிகிதம் கூட குறைக்கவில்லை. செய்தியாளர்களை சந்திக்கும் இடத்தில் பலர் உள்ளனர். அதனால் செய்தியாளர்களை அதிகம் சந்திக்கவில்லை. கட்சியாக பார்த்து எனக்கு பொறுப்பு கொடுக்கும்போது கொடுக்கட்டும்.

திமுக 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். மக்கள் மனதில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற கோபம் உள்ளது. இதற்கு முன்பு திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதை நோக்கி தான் இந்த தேர்தலும் செல்கிறது. முதலமைச்சர் வெளியில் வந்து ஒரு கிராமத்தில் 2 நாள்கள் தங்கி, மக்களிடம் பேசினால் தான் அவர்களின் மனநிலை தெரியும்.

முதலமைச்சர்

அவர்கள் என்ன சர்வே எடுத்தாலும் தோல்வி உறுதி. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியில் செல்ல வேண்டும். இன்னும் தேர்தலுக்கான சூடே ஆரம்பிக்கவில்லை. விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி முழு வடிவம் பெறும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கிய போது நான் கலந்துகொள்ள கூடாது என்று நினைக்கவில்லை. எல்லோருக்கும் பல வேலைகள் இருக்கும். கட்சி சார்பாக யார் கலந்து கொள்ள வேண்டும். அமித்ஷா சென்னை வந்தபோது, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதில் எந்த குழப்பமும் இல்லை. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று எதையாவது பரப்புகிறார்கள். மதுரையை போல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் நடந்துள்ளது. அங்கு எல்லாம் தணிக்கை  செய்ய வேண்டும்.” என்றார்.

ECI முறைகேடு: `எங்களிடம் ஆதாரமிருக்கிறது' - Rahul Gandhi | Kamal DMK BJP | Imperfect Show 25.7.2025

* இந்திராவை முந்திய மோடி? * பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்! * இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்து?* “இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வ... மேலும் பார்க்க

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

'அன்புமணி நடைபயணம்..'பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க