செய்திகள் :

மதுரை: `பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம்'- `பகீர்' கிளப்பும் ரூ.24 கோடி மோசடி!

post image

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் எனக் கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ்காரர் குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fraud

மதுரை மாவட்டம், கடச்சனேந்தலில் வசிக்கும் புதூரில் போலீஸாகப் பணிபுரிந்து வருபவர் ரமேஷ் தங்கராஜ். இவர் மனைவி பிரேமலதாவுடன் 'குயின் டிரேடிங்' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, அதை சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து சமீபத்தில் மதுரையிலுள்ள ஹோட்டலில் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் கலந்துகொண்டவர்களிடம், `எங்கள் நிறுவனம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம்' என ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் மதுரை , கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துககும் மேற்பட்டவர்களை 5 லட்சம் முதலாக 20 லட்சம் வரை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு லாபத் தொகையினை வழங்கியுள்ளனர். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் லாபத் தொகை வழங்கவில்லை. அதனால் முதலீட்டை திருப்பி கேட்டவர்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.

மோசடி

ஆனால், பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இருவரையும் சந்திக்க முடியவில்லை என்று கூறும் பாதிக்கப்பட்டவர்கள், "அவர்கள் மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி ஆகியோரிடம் புகார் அளித்ததுடன் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தோம். ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொருவரும் 20 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றமடைந்து நிற்கிறோம். எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். மோசடி செய்த ரமேஷ் தங்கராஜ் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்ததால் அவரை நம்பி பணம் செலுத்தினோம். ஆனால் அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள். எனவே எங்களுடைய பணம் கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க