செய்திகள் :

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

post image

வேலூா், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 28 போலீஸாரை கூண்டோடு இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டம் முழுவதும் மலைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேலூா், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 28 போலீஸாரை கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, வேலூா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி காவல் ஆய்வாளர் சிவச்சந்திரன் விரிஞ்சிபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல், வேலுார் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவியாளர் ஜெகதீசன் உள்பட வேலுார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை சேர்ந்த 9 உதவி காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளர்.

மேலும், வேலுார் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்குப் பிரிவில் பணியாற்றிய 28 காவல் துறையினர் கூண்டோடு மாற்றம் செய்து மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

28 policemen, including assistant police inspectors who worked in the Prohibition and Enforcement Division in Vellore and Gudiyatham, transferred...

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

கோவை: ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்-2 பெங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப... மேலும் பார்க்க

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கரூர்: திமுக முப்பெரும் விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் மறைந்த குளித்தலை சிவராமன் வீட்டிற்கு புதன்கிழமை காலை சென்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது க... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பிகாரில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரவிருக்​கும் சட்டப்பேரவைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் வழங்கப்படும்... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், தமிழக காவிரி க... மேலும் பார்க்க

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஆனந்த்குமார் வேல்குமார் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.500 மீட்டர் டி ஸ்பிரிண்ட் போட்டியி... மேலும் பார்க்க

மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் அறிவுத்திறன் எனக்கு உள்ளது: நிதின் கட்கரி

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட ஆதாயம் கிடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் க... மேலும் பார்க்க