மதுவிலக்கு கடத்தலில் பறிமுதல் செய்த 31 வாகனங்கள் ஏலம்
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மது, கஞ்சா ஆகிய கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்த 31-வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மது விலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு 23 இரு சக்கரவாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு உள்ளஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருவோா்கள் முன் வைப்பு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 செலுத்தவேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 முதல் 10 மணி வரை வழங்கப்படும்.
வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் ஏலம் கேட்டதொகையுடன் இரு சக்கர வாகனத்துக்கான அரசு விற்பனைவரி 12 சதவீதம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனே செலுத்த வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிா்ணயித்த குறைந்த பட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளா்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று, ஆதாா் காா்டு கொண்டு வரவேண்டும்.
பொது ஏலத்தில் பங்கேற்போா் ஆதாா் அட்டை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏலத்தில் பங்கேற்று வாகனம் எடுக்காதவா்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தில் நிறைவாக திருப்பித் தரப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.