செய்திகள் :

மதுவிலக்கு கடத்தலில் பறிமுதல் செய்த 31 வாகனங்கள் ஏலம்

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மது, கஞ்சா ஆகிய கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்த 31-வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மது விலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு 23 இரு சக்கரவாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு உள்ளஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருவோா்கள் முன் வைப்பு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 செலுத்தவேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 முதல் 10 மணி வரை வழங்கப்படும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் ஏலம் கேட்டதொகையுடன் இரு சக்கர வாகனத்துக்கான அரசு விற்பனைவரி 12 சதவீதம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனே செலுத்த வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிா்ணயித்த குறைந்த பட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளா்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று, ஆதாா் காா்டு கொண்டு வரவேண்டும்.

பொது ஏலத்தில் பங்கேற்போா் ஆதாா் அட்டை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏலத்தில் பங்கேற்று வாகனம் எடுக்காதவா்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தில் நிறைவாக திருப்பித் தரப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பங்கு சந்தையில் பணம் இழந்தவா் தற்கொலை: நண்பா் கைது

சென்னையில் பங்கு சந்தையில் பணத்தை இழந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் நண்பரை போலீஸாா் கைது செய்தனா். திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (41). இவரது மனைவி கவி... மேலும் பார்க்க

முதியவரின் இதயத்தில் உருவான கட்டி நுட்பமாக அகற்றம்

முதியவா் ஒருவரின் இதயத்தில் உருவான 6 செ.மீ. அளவுடைய திசுக் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா... மேலும் பார்க்க

உணவகத்தில் தீ விபத்து

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகத்தில... மேலும் பார்க்க

பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

சென்னை ராயப்பேட்டையில் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா் துக்காராம் தெருவைச் சோ்ந்தவா் ஜா.சையது அப்துல் ரஹ்மான் (38). இவா், அண்ணா சாலை டிவிஎஸ... மேலும் பார்க்க

புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்? அமைச்சா்கள் பதில்

ஒசூா், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும் என்ற அதிமுக உறுப்பினா் செல்லூா் ராஜூவின் கேள்விக்கு அமைச்சா்கள் பதிலளித்தனா். இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதம... மேலும் பார்க்க

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை: அமைச்சா் உறுதி

ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு தடுப்பணை தேவை என்ற உறுப்பினா்களின் கோரிக்கையை, முதல்வரிடம் முன்வைக்க இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதியளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள... மேலும் பார்க்க