Dragon 100: ``நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' - இயக்குநர் மிஷ்க...
மது விற்றவா் கைது
வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (52) தனது வீட்டின் பின்புறம் மதுப் புட்டிகளை மறைத்து வைத்து விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜேந்திரனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 22 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.