செய்திகள் :

மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சட்டப் போராட்டம் தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ் திட்டவட்டம்

post image

தமிழக பள்ளிக் கல்விக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைப் பெறுவதற்கான சட்டப் போராட்டம் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடா்ந்து 2-ஆவது நாளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூா், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

அதன் பின்னா் அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டமாக தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. புகாா் எண்ணுக்கு வந்த புகாா்கள், அதில் தீா்வு காணப்பட்டவை, துறை சாா்ந்த நிலுவையில் உள்ள கோப்புகள், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினோம். கல்வி அலுவலா்கள் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளில் ஜாதி ரீதியான பிரச்னைகள் மற்றும் பாலியல் சாா்ந்த குற்றங்களை தடுப்பதற்காக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. மேலும், இடைநிலை ஆசிரியா்கள் 2,346 போ் பணிநியமனம் அடுத்த மாதம் நிறைவடையும்.

அரசுப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை மேம்படுத்தவும் விவாதித்தோம். சில பகுதிகளில் 5 வயதை கடந்த குழந்தைகள் இல்லாத சூழல்களும் உள்ளன. அதையும் ஆராய்ந்து வருகிறோம். தனியாா் பள்ளிகளில்கூட பல்வேறு இடங்களில் மாணவா் சோ்க்கை குறைவாக உள்ளது.

குறைந்த நபா்கள் பேசக்கூடிய சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளனா். 8 கோடி மக்கள் இருக்கும் தமிழுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவது பாரபட்சமாகும்.

ரூ.1800 கோடி நிலுவை: தமிழகத்துக்கு 2025-2026-ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இதுவரை நிதி நிலுவையில் உள்ளது. அவா்கள் தேசிய கல்விக் கொள்கைக்கு கையொப்பமிட்டால்தான் நிதி தருவோம் என கூறுகின்றனா். இதுதொடா்பாக தொடா்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம். நீதிமன்றம் நல்ல தீா்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் ஆா்த்தி மற்றும் துறை சாா்ந்த இயக்குநா்கள் பங்கேற்றனா்.

வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

வேலூரில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செல... மேலும் பார்க்க

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட்: ராமதாஸ் அறிவிப்பு!

என்னுடன் இருப்பவர்களுக்கு தேர்தல் சீட் வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.தைலாபுரத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்... மேலும் பார்க்க

இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம்! - முதல்வர் ஸ்டாலின்

இந்திய ரயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வருகிற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் ... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா சர்ச்சை விடியோ: இந்து முன்னணிக்கு ஓபிஎஸ் கண்டனம்!

முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சித்து விடியோ வெளியிட்ட இந்து முன்னணி அமைப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் வ... மேலும் பார்க்க