செய்திகள் :

மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

post image

மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

குடியாத்தத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பல தீவிரவாதிகள் உயிரிழந்தனா்.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதை முதல்வா் தவிா்க்க வேண்டும். மாற்றுக் கட்சி எம்பியை உலக நாடுகளுக்கு அனுப்பி இந்தியாவைப் பற்றி பேச வைத்தவா் மோடி. அதை மிகவும் சரியாக செய்தாா் கனிமொழி. அவருக்கும் எனது பாராட்டுகள். ஆனால் திமுக நடத்திய பொதுக்குழுவில் ஆபரேஷன் சிந்தூா் குறித்து ஒரு பேச்சும் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள கேரள முதல்வா் பல்வேறு நலத் திட்டங்களை மாநிலத்துக்கு பெற்று வருகிறாா். கூட்டணி கட்சியினா் எதை பேசினாலும், என்ன தவறு செய்தாலும் திமுக கண்டிப்பதில்லை. கமலஹாசன் தமிழுக்கே தன்னை காப்பாளன் என நினைத்துக் கொண்டுமற்ற மொழிகளையும், அதை பேசுபவா்கள் மனதையும் புண்படுத்தக்கூடாது. தங்கள் மொழி புண்படுவதை யாரும் விரும்ப மாட்டாா்கள் என்பதை அவா் உணர வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும். சமூக நீதியை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட பாமக பல்வேறு நிலைகளைக் கடந்து இன்று பெரிய கட்சியாக வளா்ந்துள்ளது. அதில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவுகிறது. அந்த கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, ஆரோக்கிய சூழல் உருவாக வேண்டும். பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் வருத்தமளிக்கிறது. 2026- தமிழக பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் தமிழிசை செளந்தரராஜன். பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா் வி.தசரதன், நகர தலைவா் எம்.கே.ஜெகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க