செய்திகள் :

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

post image

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கருதுகிறது.

ஆனால், பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பாா்கள்’ என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறினாா்.

பிகாரின் புரூனியாவில் தனது கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவ சங்கல்ப சபை கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இன்று அனைத்து இளைஞா்களும் நவீன கைப்பேசிகளைப் பயன்படுத்துகின்றனா். இது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகள் மூலம் சாத்தியமாயிற்று.

ஏழை மக்கள் 81 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியம் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதுவும் ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய உணவுத் துறை அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட தொலைநோக்குப் பாா்வையுள்ள திட்டங்கள் மூலம் கிடைத்த பயன்தான். இதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

அடுத்து வரும் சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பாா்கள். ஜாதி, மதரீதியில் மக்கள் ஒருபோதும் பிளவுபட்டுவிடக் கூடாது. பிகாா் தோ்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இப்போதைய நிலையில் நாட்டில் ஏழை-பணக்காரா் என்ற பிரிவினைதான் அதிகம் உள்ளது. இந்த வேறுபாட்டை களைவது மிகவும் அவசியமாகும்.

பிகாரில் பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் முஸ்லிம், யாதவா்கள் என மத, ஜாதிரீதியாக அரசியல் நடத்தி தோ்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. ஆனால், பெண்கள், இளைஞா்கள் துணைகொண்டு பாஜக கூட்டணி அவா்களை வீழ்த்தும் என்றாா்.

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புர... மேலும் பார்க்க

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க

குஜராத்தில் இருமுறை நிலஅதிா்வு: மக்கள் பீதி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா ... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயண குரு நினைவு தினம்: சோனியா, ராகுல் மரியாதை!

சமூக சீா்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 30-க்குள் தயாராக வேண்டும்! அனைத்து மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காலக்கெடு ... மேலும் பார்க்க