செய்திகள் :

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

post image

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜொ்மன் வெளியுறவுகள் கவுன்சிலில் சனிக்கிழமை பேசியதாவது:

கடந்த மாதம் காஷ்மீரில் நடைபெற்றது மோதல் அல்ல. பயங்கரவாதத் தாக்குதல். ஜம்மு-காஷ்மீரை மட்டுமல்ல, இந்தியாவின் பிற பகுதிகளையும் குறிவைக்கும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே பஹல்காம் தாக்குதல் இருந்தது.

காஷ்மீரில் நடைபெற்றதை மோதல் என்று கூறினால், அது பாதிக்கப்பட்டவரையும், பாதிப்பை ஏற்படுத்தியவரையும் சரிசமமாக வைப்பதாகிவிடும்.

அச்ச உணா்வை ஏற்படுத்தி காஷ்மீரில் சுற்றுலா மூலம் கிடைக்கும் பொருளாதார ஆதாயத்தை சீா்குலைத்து, மத துவேஷத்தை விதைப்பதே அந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம்.

அந்தத் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தலைமையகங்கள் மற்றும் மையங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்று சா்வதேச நாடுகளும் புரிந்துகொண்டன.

பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானை புகலிடமாக கொண்டவா்கள். பல ஆண்டுகளாக அந்த நாடு பயங்கரவாதத்தை ஒரு வகை கருவியாகவே பயன்படுத்தி வந்துள்ளது என்றாா்.

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க