செய்திகள் :

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

post image

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும். அதனை தொடர்ந்து, 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவதுடன் பெருமாள் எழுந்தருளும் வெளிப்பிரகார தேரோட்டம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவங்களுடன் பங்குனித் திருவிழா நிறைவுபெறும்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி

நிகழாண்டிற்கான தொடங்க விழா, இன்று காலை (செவ்வாய்க்கிழமை) 11.30 மணிக்கு காலை த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில், கருடன் உருவம் பொறித்த கொடியினை வேதமந்திரங்கள் கூறியபடி பட்டாட்ச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திராளன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இத்திருவிழாவினையொட்டி, ஒவ்வொரு நாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி, கண்ணன், கிருஷ்ணர், ராஜ பட்டாபிராமர், வேணு கோபாலர், மாயவநாதன், வைகுண்டநாதன் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வெளிப் பிராகாரங்களின் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வுகளாக, மார்ச்.23 கண்ட பேரண்ட பக்ஷி, மார்ச் 27ல் தங்க சூர்யபிரபை, ஏப். 1 கோரதம், ஏப்.2. காலை வெண்ணெய்த்தாழி, இரவு வெட்டுங்குதிரை, 3ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து,12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மார்ச் 4ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன், அறங்காவலர்கள் கே.கே.பி. மனோகரன், வெ. லதா, துரை நடராஜன், நிர்வாக அலுவலர் எஸ்.மாதவன், மண்டகப்படிதாரர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஓடிடி தேதி!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் கடந்த பிப். 2... மேலும் பார்க்க

எம்புரான்: முதல்முறையாக ஐமேக்ஸில் வெளியாகும் மலையாளத் திரைப்படம்!

நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம்தான் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் ... மேலும் பார்க்க

வாமோஸ் ஆர்ஜென்டீனா..! தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மனம் திறந்த மெஸ்ஸி!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மெஸ்ஸி வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2022இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வென்றது.37 வயதாகும் லியோனல் ... மேலும் பார்க்க

ரெட்ரோ: தாய்லாந்தில் தற்காப்பு கலைகளைக் கற்ற சூர்யா..!

ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார்.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் ... மேலும் பார்க்க

புதிய தொடரில் ரேஷ்மாவுடன் இணையும் சுந்தரி சீரியல் நடிகர்!

புதிய தொடரொன்றில் நடிகை ரேஷ்மா முரளிதரன் மற்றும் சுந்தரி தொடர் நாயகன் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கவுள்ளனர்.அண்மையில் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஜி... மேலும் பார்க்க

முதலில் தமிழன்... பிறகு கம்யூனிஸ்ட்! நீக்கப்பட்ட விடுதலை காட்சிகள் வெளியீடு!

விடுதலை திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த விடுதலை, விடுதலை - 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே ப... மேலும் பார்க்க