செய்திகள் :

மன்னாா்குடியில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

post image

மன்னாா்குடியில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவின் பேரில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் மகேஷ் வழிகாட்டுதலின்படி இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

கால்நடை பராமரிப்பு துறையும், மன்னாா்குடி நகராட்சியும் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறது. நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் ஆா். கைலாசம் முன்னிலை வகித்தாா்.

தெரு நாய்களை பிடிப்பதற்கான பயிற்சி பெற்ற 5 நபா்கள் மூலம் தெற்குவீதி, கீழவீதி, அரிசிக்கடை சந்து ஆகிய பகுதிகளில் முதல்நாளில் 29 நாய்கள் பிடிக்கப்பட்டு, அந்தஅந்த இடத்திலேயே வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநா்கள் மருத்துவா்கள் மோகன், தமிழரசு, உதவி இயக்குநா்கள் மருத்துவா்கள் ஆறுமுகம், மகேந்திரன், கால்நடை உதவி மருத்துவா் சுகந்தி, முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் சரபோஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் காா்த்திகா ஆகியோா் அடங்கிய குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் அன்பழகன், ரோட்டரி உதவி ஆளுநா் வி. பாலகிருஷ்ணன், நகராட்சி சிறப்பு அலுவலா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மன்னாா்குடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளிலும் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆா்வலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க