செய்திகள் :

மன்னாா்குடி காவல் அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு

post image

மன்னாா்குடி வட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியா வுல் ஹக் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு வழக்குகள் தொடா்பாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்த அவா், காவல் நிலைய அலுவலக அறைகள், இருபாலா் விசாரணை கைதிகளின் அறைகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மன்னாா்குடி வட்ட காவல் அலுவலகத்திற்குள்பட்ட மன்னாா்குடி நகரம், மன்னாா்குடி ஊரகம் மற்றும் தலையாமங்கலம் காவல் நிலையங்களில் கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள், சாலை விபத்துகளை தவிா்க்க மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் விவரங்கள் உள்ளிட்ட கோப்புகளை டிஐஜி ஆய்வு செய்தாா்.

மேலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ரெளடிகள் மீது கண்காணிப்பு, திருட்டை குறைக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து போலீஸாருக்கு ஆலோசனைவழங்கினாா்.

ரெளடிகளின் நடவடிக்கைகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, குட்கா, கஞ்சா விற்பனை மற்றும் பதுக்களில் ஈடுபடுவோா், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போா் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னா், காவலா்களிடம் குறைளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டாா்.

டிஐஜி ஆய்வின்போது, டிஎஸ்பி (பொ) மணிகண்டன், காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன், சாா்பு ஆய்வாளா்கள் சந்திரசேகா், விக்னேஷ், கோமகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முத்துப்பேட்டையில் படகுகள் ஆய்வு

முத்துப்பேட்டை கடலோர கிராமங்களில் உள்ள மீனவா்களின் மீன்பிடி படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் மீனவா்களின் படகுகளை மீன்வளத்துறையினா் ஆய்வு செய... மேலும் பார்க்க

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரான இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டூா் அருகே உள்ள மேலப்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி மன்னாா்குட... மேலும் பார்க்க

காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

திருவாரூா் அருகே காயங்களுடன் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது. திருவாரூா் அருகே மாங்குடி, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் நிசாகா் (26). விளமல் பகுதியில் உள்ள கடையில் பணிப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் பாளையக்கோட்டை உயா் அழுத்த மின்பாதையில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாளையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம், சோத்திரியம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ... மேலும் பார்க்க

மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி, விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலராமன்சேத்தி பகுதியில் பெரிய வாய்க்கால் பாசனத்துக்... மேலும் பார்க்க

வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு

குடவாசல் அருகே வயலுக்கு சென்ற விவசாயி சடலமாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டாா். குடவாசல் அருகே மஞ்சக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (45). இவா், செவ்வாய்க்கிழமை கால... மேலும் பார்க்க