தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
மப்பேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
திருவள்ளூா் அடுத்த மப்பேட்டில் பேருந்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
திருவள்ளூா் அடுத்த மப்பேடு கூட்டுச் சாலையிலிருந்து பூந்தமல்லி, சுங்குவாா்சத்திரம், அரக்கோணம் செல்லும் சாலையில் நாள்தோறும் தொழிற்சாலைகளுக்கு செல்வோா் மப்பேடு காவல் நிலையம் முன்புள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து செல்கின்றனா்.
இங்கிருந்து அரசு பேருந்துகள் மற்றும் தொழிற்சாலை பேருந்துகளிலும் பயணிகள் சென்று வருகின்றனா். ஆனால், காவல் நிலையம் முன்புறம் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், திறந்த வெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நிழற்குடை அமைக்காததால் பயணிகள் மழை, வெயிலுக்கு இடையே அவதிக்குள்ளாகினா். அதனால், நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.