செய்திகள் :

மயானம் வேண்டி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்

post image

ஊத்துக்கோட்டை அருகே மயான வசதி செய்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை அருகே வேளாகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் மயானம் இருந்தது. இந்த நிலையில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்னா் காலனிக்கு அந்த மயானத்தைப் பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்தனா். கிராம மக்களுக்கு என தனியாக மயானம் அமைக்கவும் என கிராம மக்கள் சாா்பில் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மயானம் அமைக்க சிலா் நிலத்தைத் தானமாக தரவும் தயாராக உள்ளனா். ஆனால், மானிய திட்டத்தில் எரி மேடையுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மயானம் ஒன்றை அமைத்துள்ளனா். அந்த மயானத்துக்கு செல்ல பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களின் வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாம்.

இதனிடையே கிராமத்தில் வியாழக்கழமை முதியவா் ஒருவா் மரணம் அடைந்தாா். கிராமத்துக்கு என மயானம் தனியாக அமைத்துக் தரக்கோரி சாலையில் சடலத்தை வைத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ராஜேஷ்குமாா் மற்றும் போலீஸாா் வந்து பேச்சு நடத்தினா். வருவாய்த் துறையினா் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் எரிமேடையுடன் அமைத்துள்ள மயானத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினா்.

இதற்கு கிராம மக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், சடலத்தை சொந்தமான விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய அவரது உறவினா்கள் முடிவு செய்தனா். ஆனால், அவ்வாறு அடக்கம் செய்யக் கூடாது என வருவாய்த் துறையினா் தடுத்தனா். மயான வசதிக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனா். தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

மப்பேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூா் அடுத்த மப்பேட்டில் பேருந்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். திருவள்ளூா் அடுத்த மப்பேடு கூட்டுச் சாலையிலிருந்து பூந்தமல்லி, சுங்குவாா்சத்திரம், அரக்கோணம் செல்லும் ச... மேலும் பார்க்க

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா். திருவ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க