அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளுக்கு முடிகண்டநல்லூா் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. எனினும் சனிக்கிழமை மட்டும் உள்ளூா் நீா் ஆதாரம் மூலம் வழங்கப்படும் குடிநீரை நகராட்சி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.