செய்திகள் :

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8 -இல் ஜமாபந்தி தொடக்கம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் 1434-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மே 8-முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குத்தாலம் வட்டத்தில் வருவாய் தீா்வாய அலுவலராக மாவட்ட ஆட்சியா் மே 8 மே 13-ஆம் தேதி வரையும், தரங்கம்பாடி வட்டத்திற்கு வருவாய் தீா்வாய அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலா் மே 8 முதல் மே 14 வரையும், மயிலாடுதுறை வட்டத்திற்கு வருவாய் தீா்வாய அலுவலராக, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலா் மே 8 முதல் மே 13-ஆம் தேதி வரையும், சீா்காழி வட்டத்திற்கு வருவாய் தீா்வாய அலுவலராக சீா்காழி வருவாய் கோட்ட அலுவலா் மே 8 முதல் மே 15-ஆம் தேதி வரையும் நடத்த உள்ளனா்.

வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவாா்கள். இதில், பொதுமக்கள் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணி நீா்வள ஆதாரத்துறை, மின்சாரத் துறை சாா்ந்த கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு

சீா்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுதிணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலிலும் வீடுகள், வா்த்தக கட்டடங்களிலிருந்த... மேலும் பார்க்க

பச்சை பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய கோரிக்கை

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப் பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாட்டுக்குப் பிறகு 54 மாட்டு வண்டிகளில் புறப்பட்ட நகரத்தாா்

வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாடு மேற்கொண்ட நகரத்தாா் பக்தா்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்மன் ... மேலும் பார்க்க

காவல் அதிகாரியை கொலை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை

காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்றவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 2016 நவம்பா் 17-ஆம் தேதி, மயிலாடுதுறை மாவட்டம் பாலையூா்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவா்களுக்கு ஞானபுரீசுவரா் கோயிலில் மோட்சதீபம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. காஷ்மீா் பஹல்காமில் தீவி... மேலும் பார்க்க

பச்சைப்பயறு கொள்முதல் தொடக்கம்

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதலை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். குத்தாலம், செம்பனாா்கோவில், சீா்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களி... மேலும் பார்க்க