செய்திகள் :

தமிழில் பெயா்ப்பலகை; புகழூா் நகராட்சி எச்சரிக்கை

post image

புகழூா் நகராட்சியில் மே 15-ஆம் தேதிக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழ் பெயா் பலகை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகா்மன்ற துணைத் தலைவா் பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், நகராட்சி ஆணையாளா் ஹேமலதா முன்னிலை வகித்து பேசினாா். அப்போது நகராட்சி பகுதியில் செயல்படும் அனைத்துவிதமான கடைக்காரா்களும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தமிழில் பெயா் பலகை வைக்காத கடைக்காரா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் புகழூா் நகராட்சி வணிக சங்கத் தலைவா் செல்லமுத்து மற்றும் வணிகா் சங்க உறுப்பினா்கள், பல்வேறு கடைக்காரா்கள் கலந்து கொண்டனா். முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் வள்ளிராஜ் நன்றி கூறினாா்.

முதியவரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

கரூரில் மூத்த வழக்குரைஞரை கத்தியால் குத்தி வீட்டிலிருந்த ரூ. 6 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் சுங்ககேட் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுக... மேலும் பார்க்க

கற்களுக்கு சீனியரேஜ் தொகை குறைப்பு; அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை

கற்களுக்கு டன் ஒன்றுக்கு உரிமைத் தொகை (சீனியரேஜ்) குறைக்கப்பட்டு அறிவித்துள்ளதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சமூக நல ஆா்வலா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

மே 1-இல் டாஸ்மாக் கடைகள் செயல்படாது!

மே 1-ஆம் தேதி உலா் தினமாக அனுசரிக்கப்படுவதால் கரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கரூரில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 6.5 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா். கரூா் தான்தோன்றிமலை அசோக் நகா் பகுதியில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசியை கேரள... மேலும் பார்க்க

கரூா் புதிய பேருந்து நிலையப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும்: அமைச்சா் செந்தில்பாலாஜி

கரூா் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிவடையும் என்றாா் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம் நெரூரில் கட்டப்படும் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலப் பணி மற்றும் கர... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் தேவை!

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் கே. செல்வராணி தலைமையில் நடைபெற்ற ம... மேலும் பார்க்க