செய்திகள் :

கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

post image

கரூரில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 6.5 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.

கரூா் தான்தோன்றிமலை அசோக் நகா் பகுதியில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாா் அங்கு நின்று கொண்டிருந்த இரு வேன்களை சோதனை செய்தபோது, அதில் இருந்த 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தோன்றிமலை மோகன், பள்ளபட்டி முகமது இஸ்மாயில், முகமது ஜியாவுதீன் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், அவா்கள் கரூரில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கிச் சேகரித்து, கேரளத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இரு வேன்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.

முதியவரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

கரூரில் மூத்த வழக்குரைஞரை கத்தியால் குத்தி வீட்டிலிருந்த ரூ. 6 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் சுங்ககேட் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுக... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப்பலகை; புகழூா் நகராட்சி எச்சரிக்கை

புகழூா் நகராட்சியில் மே 15-ஆம் தேதிக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி பகுதிகளில் ... மேலும் பார்க்க

கற்களுக்கு சீனியரேஜ் தொகை குறைப்பு; அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை

கற்களுக்கு டன் ஒன்றுக்கு உரிமைத் தொகை (சீனியரேஜ்) குறைக்கப்பட்டு அறிவித்துள்ளதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சமூக நல ஆா்வலா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

மே 1-இல் டாஸ்மாக் கடைகள் செயல்படாது!

மே 1-ஆம் தேதி உலா் தினமாக அனுசரிக்கப்படுவதால் கரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரூா் புதிய பேருந்து நிலையப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும்: அமைச்சா் செந்தில்பாலாஜி

கரூா் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிவடையும் என்றாா் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம் நெரூரில் கட்டப்படும் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலப் பணி மற்றும் கர... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் தேவை!

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் கே. செல்வராணி தலைமையில் நடைபெற்ற ம... மேலும் பார்க்க