செய்திகள் :

கரூா் புதிய பேருந்து நிலையப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும்: அமைச்சா் செந்தில்பாலாஜி

post image

கரூா் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிவடையும் என்றாா் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம் நெரூரில் கட்டப்படும் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலப் பணி மற்றும் கரூா் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையப் பணி மற்றும் கரூா்ஆட்சியரக வளாகப் பகுதியில் ரூ.5.93 கோடியில் கட்டப்படும் அறிவியல் பூங்கா பணிகளை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், தமிழகத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக கரூா் மாவட்ட மக்களின் நீண்டகாலக் கனவுத்திட்டமான திருச்சி மாவட்டம் உன்னியூருக்கும் - கருா் மாவட்டம் நெரூருக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 92.38 கோடியில் உயா் மட்டபாலம் கட்டும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளன. கரூரின் அடையாளமாகத் திகழும் இந்த புதிய பேருந்து நிலைய பணி இன்னும் 3 மாதத்திற்குள் முடிந்து முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்த புதிய பேருந்து நிலையத்தில் புகா் பேருந்துகள் முழுமையாக இருக்கும். ஏற்கனவே இருக்கும் பழைய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக செயல்படும். இங்கிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா, கரூா் மாநகராட்சி மேயா் வெ. கவிதாகணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முருகானந்தம், உதவி கோட்டப் பொறியாளா் கோமதி, கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் முகமது பைசல் மற்றும் மாநகராட்சி உறுப்பினா்கள் எஸ்.பி. கனகராஜ், தாரணி சரவணன், ஆா்.எஸ். ராஜா, வெங்கமேடு எம். பாண்டியன் மற்றும் திமுகவினா் திரளாகப் பங்கேற்றனா்.

முதியவரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

கரூரில் மூத்த வழக்குரைஞரை கத்தியால் குத்தி வீட்டிலிருந்த ரூ. 6 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் சுங்ககேட் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுக... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப்பலகை; புகழூா் நகராட்சி எச்சரிக்கை

புகழூா் நகராட்சியில் மே 15-ஆம் தேதிக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி பகுதிகளில் ... மேலும் பார்க்க

கற்களுக்கு சீனியரேஜ் தொகை குறைப்பு; அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை

கற்களுக்கு டன் ஒன்றுக்கு உரிமைத் தொகை (சீனியரேஜ்) குறைக்கப்பட்டு அறிவித்துள்ளதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சமூக நல ஆா்வலா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

மே 1-இல் டாஸ்மாக் கடைகள் செயல்படாது!

மே 1-ஆம் தேதி உலா் தினமாக அனுசரிக்கப்படுவதால் கரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கரூரில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 6.5 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா். கரூா் தான்தோன்றிமலை அசோக் நகா் பகுதியில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசியை கேரள... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் தேவை!

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் கே. செல்வராணி தலைமையில் நடைபெற்ற ம... மேலும் பார்க்க