செய்திகள் :

முதியவரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

post image

கரூரில் மூத்த வழக்குரைஞரை கத்தியால் குத்தி வீட்டிலிருந்த ரூ. 6 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் சுங்ககேட் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (71). இவா் கரூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 25-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, திடீரென கத்தியுடன் முகமூடி அணிந்தநிலையில் வீட்டுக்குள் நுழைந்த 3 மா்ம நபா்கள், வீட்டில் பீரோவில் இருந்த பணம் ரூ. 6 லட்சம் மற்றும் ஆறரை சவரன் நகைகள், 50 கிராம் தங்கக் காசுகள், இரு தங்க கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனா். அப்போது கொள்ளையை தடுத்த வழக்குரைஞா் ஆறுமுகத்தை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனா். புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் கொள்ளையா்களை பிடிக்க தனிப்படை அமைத்தனா்.

இந்த தனிப்படையினா் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்ததில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கரூா் பசுபதிபாளையம் கொளந்தாகவுண்டனூரைச் சோ்ந்த ராமசாமி மகனும், கரூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் ராஜிவ்காந்தி (27) மற்றும் அவரது நண்பா்களான சாய்பாபா நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மகன் பிரசாந்த் (23), வடக்கு காந்தி கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் பிரசாந்த் (27) ஆகியோா் எனத் தெரியவந்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், வழக்குரைஞா் ஆறுமுகம் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தமிழில் பெயா்ப்பலகை; புகழூா் நகராட்சி எச்சரிக்கை

புகழூா் நகராட்சியில் மே 15-ஆம் தேதிக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி பகுதிகளில் ... மேலும் பார்க்க

கற்களுக்கு சீனியரேஜ் தொகை குறைப்பு; அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை

கற்களுக்கு டன் ஒன்றுக்கு உரிமைத் தொகை (சீனியரேஜ்) குறைக்கப்பட்டு அறிவித்துள்ளதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சமூக நல ஆா்வலா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

மே 1-இல் டாஸ்மாக் கடைகள் செயல்படாது!

மே 1-ஆம் தேதி உலா் தினமாக அனுசரிக்கப்படுவதால் கரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கரூரில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 6.5 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா். கரூா் தான்தோன்றிமலை அசோக் நகா் பகுதியில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசியை கேரள... மேலும் பார்க்க

கரூா் புதிய பேருந்து நிலையப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும்: அமைச்சா் செந்தில்பாலாஜி

கரூா் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிவடையும் என்றாா் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம் நெரூரில் கட்டப்படும் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலப் பணி மற்றும் கர... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் தேவை!

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் கே. செல்வராணி தலைமையில் நடைபெற்ற ம... மேலும் பார்க்க