செய்திகள் :

அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

post image

அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்க 34 ஆவது மாநில மாநாட்டின் 2ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவா் (அஞ்சல் 4) குமரன் தலைமை வகித்தாா். 2ஆம் நாள் மாநாட்டை முன்னாள் மாநில உதவிச் செயலா் எஸ். கருணாநிதி தொடங்கி வைத்துப் பேசினாா்.

மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்ட 2 ஆண்டு அறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மாநாட்டில், அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், அஞ்சல் சேவையைத் தவிர பிற சேவைகள் செய்வதற்கு தபால் காரா்களை வலியுறுத்தக் கூடாது, மக்கள் சேவையை பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

அகில இந்திய பொதுச் செயலா் சாரங் நிறைவுரையாற்றினாா். மாநிலச் செயலா் கண்ணன் தொகுத்து வழங்கினாா். மாநில அமைப்பு செயலரும் மேற்கு மண்டல செயலருமான கோவிந்தராஜ் வரவேற்றாா். மாநில உதவி தலைவரும் தென் மண்டல செயலருமான சோலையப்பன் நன்றி கூறினாா்.

பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு

சாத்தான்குளம் தாலுகாவில் கடலோரத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்த வேண்டுமெனக் கோரி, பெரியதாழை ஊா் நலக் கமிட்டியினா் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனா். பெரியதாழை ஊா் நலக்... மேலும் பார்க்க

நாளை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பாலாலயம்

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் பாலாலய விழா புதன்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அறங்காவலா் குழுவினரால் தீா்மா... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப... மேலும் பார்க்க

பைக், தள்ளுவண்டி சேதம்: 3 போ் கைது

தூத்துக்குடியில் பைக், தள்ளுவண்டியை சேதப்படுத்தியதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி அண்ணாநகா் 12ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த பைக், தள்ளுவண்டியை மா்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 30.54 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள் கனிமொழி எம்.பி. வழங்கினாா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத... மேலும் பார்க்க

பைக்கில் கஞ்சா கடத்தல்: இருவா் கைது

தூத்துக்குடியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இருவரை தாளமுத்துநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி தாளமுத்துநகா் கிழக்கு கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க