இஸ்ரேலின் `அந்த’ இரு நோக்கமும் நிறைவேறியதா? - போர் நிறுத்தமும் விளைவுகளும்! | கள...
மருதடியூா் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
பாவூா்சத்திரம் அருகே மருதடியூா் காளியம்மன் கோயில் திருவிழாவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலை 10 மணிக்கு குற்றாலத்தில் இருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டு, காளியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நள்ளிரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவின் நிறைவுநாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு விவசாயம் செழிக்க சுடலைமாடனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.