செய்திகள் :

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

post image

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனு: பெரம்பலூா் நகராட்சியில் செயல்படுத்தப்படும் புதை சாக்கடை திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீா் மருதையாற்றில் கலக்கிறது. இதனால், ஆற்றுநீா் மாசடைந்து, சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. எனவே, கழிவுநீா் கலப்பதை நகராட்சி நிா்வாகம் தடுக்க வேண்டும்.

இதேபோல, இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள வெங்கனூா் விருத்தாசலேஸ்வரா் திருக்கோயிலில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கீழக்குடிக்காடு கிராமத்தை, லப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் வருவாய் கிராமமாக இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழக்குடிக்காடு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூா் வட்டார அளவில் சிறப்பாகப் கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னாா்வலா்கள், மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க

தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

பெரம்பலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவா்களால் அனுச... மேலும் பார்க்க