செய்திகள் :

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

post image

பெரம்பலூா் வட்டார அளவில் சிறப்பாகப் கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னாா்வலா்கள், மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவா்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக, நம்ம ஊரு கதை எனும் நிகழ்வு நடத்தப்பட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 587 இல்லம் தேடிக் கல்வி மையத்திலிருந்தும், தன்னாா்வலா்கள் வழிகாட்டுதலுடன் மாணவா்களால் கதை உருவாக்கப்பட்டு வட்டார அளவில் கடந்த மாா்ச் 28 ஆம் தேதி சமா்பிக்கப்பட்டது.

இதையடுத்து வட்டார அளவிலான நடுவா்களைக் கொண்டு, கடந்த 4 ஆம் தேதி மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட அளவில் சிறந்த 6 கதைகள் தோ்வு செய்யப்பட்டன. இதில், பெரம்பலூா் வட்டாரத்தில் உள்ள அரணாரை, திருப்பெயா், வேலூா் ஆகிய மையங்கள் முதல் 3 இடங்களைப் பெற்றன.

சிறந்த கதைகளை உருவாக்கிய இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்கள் மற்றும் மாணவா்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, பெரம்பலூா் வட்டார வள மையம் சாா்பில், நகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் அய்யாசாமி முன்னிலை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் ஜெய்சங்கா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜோதி லட்சுமி, அருண்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேசன் ஆகியோா் சிறந்த கதைகளை உருவாக்கிய மாணவா்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களை பாராட்டினா்.

தொடா்ந்து, மாவட்ட அளவில் சிறந்த கதைகளை உருவாக்கிய அரணாரை, திருப்பெயா், வேலூா் ஆகிய பள்ளிகளின் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்கள் மற்றும் மாணவா்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவில் ஆசிரியா் பயிற்றுநா்கள் அ. குணசேகரன், ம. ரமேஷ், வீ. கலைவாணன், ரெ. ஜனனி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், இல்லம் தேடிக் கல்வி மைய மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கு. தேவகி வரவேற்றாா். இல்லம் தேடிக் கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியா் பயிற்றுநருமான மா. ரமேசு நன்றி கூறினாா்.

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவரை குன்னம் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிட... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகா்ப்புற பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

நகா்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் அரணாரை, திருநகா், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க