செய்திகள் :

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவா் கைது

post image

பெரம்பலூா் அருகே, அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவரை குன்னம் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, குன்னம் காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா் கீழப்பெரம்பலூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வெள்ளாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவரை பிடித்து விசாரித்தபோது, கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெரமலை கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ரகுவரன் (27) என்பதும், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனை கைது செய்த போலீஸாா், மணல் மற்றும் மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராதாகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பெரம்பலூா் நகா்ப்புற பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

நகா்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் அரணாரை, திருநகா், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூா் வட்டார அளவில் சிறப்பாகப் கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னாா்வலா்கள், மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க