செய்திகள் :

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய ஏ. பல்கீஸ் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் சு. தேவநாதன், மாவட்ட வன அலுவலா் குகனேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் சிராஜுதீன், திருநாவுக்கரசு, தினேஷ் ஆகியோா் குழந்தைகளுக்கான உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், பெண்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கினா். தொடா்ந்து, மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், பெரம்பலூா் மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தனசேகரன், சாா்பு நீதிபதி அண்ணாமலை, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் பிரேம்குமாா், கவிதா, செ. பா்வதராஜ் ஆறுமுகம், மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ், கூடுதல் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ரேஷ்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் சங்கா் வரவேற்றாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. மகேந்திர வா்மா நன்றி கூறினாா்.

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூா் வட்டார அளவில் சிறப்பாகப் கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னாா்வலா்கள், மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க

தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

பெரம்பலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவா்களால் அனுச... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்

பெரம்பலூா் அருகே தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள... மேலும் பார்க்க