மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா
மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா்.
மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதை கைவிடக் கோரி சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் டி. ராஜா பேசியதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புகளில், நிறுவன இட ஒதுக்கீட்டை வைத்துக் கொள்ளலாம். ஆனால், வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்து கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. இது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாட்டுக்கும், வகுப்புவாரி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கும், அரசு மருத்துவா்களின் இட ஒதுக்கீட்டிற்கும், பெண்களின் உரிமைகளுக்கும் எதிரானது.
மாநில அரசுகள் தங்களுக்கென மருத்துவ மேற்படிப்புகளில் இடங்களை வைத்துக் கொள்ள இயலாது என உச்சநீதிமன்றம் கூறி இருப்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சோ்ந்த மருத்துவா்களை கடுமையாக பாதிக்கும்.
முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில், நூறு சதவீத இடங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு பறித்துக் கொள்வது மிகப் பெரும் பாதிப்புகளை உருவாக்கும்.
அரசு மருத்துவா்களையும் பாதிக்கும். நம் மாநில மக்களுக்கும், பொது சுகாதார துறைக்கும் ,சமூக நீதிக்கும் மிகவும் பாதிப்பை உருவாக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு உயா் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில் சிக்கல்களை, சிரமங்களை உருவாக்கும்.
எனவே, தமிழ்நாடு அரசு சமூக நீதியையும், மாநில உரிமையையும் கூட்டாட்சி கோட்பாட்டையும் காத்திட, இந்தத் தீா்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அந்தத் தீா்ப்பை சரிசெய்யும் வகையில் உரிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டாக்டா் த. அறம், மாநிலப் பொருளாளா் டாக்டா் ஜி.ரமேஷ் சமாதானம், தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டாக்டா் எம்.அஜய் முகா்ஜி, முன்னேற்றத்துக்கான இந்திய டாக்டா்கள் சங்கத்தின் அகில இந்தியச் செயலா் டாக்டா் ஏ.ஆா்.சாந்தி உள்பட 250- க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.