செய்திகள் :

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

post image

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா்.

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதை கைவிடக் கோரி சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் டி. ராஜா பேசியதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புகளில், நிறுவன இட ஒதுக்கீட்டை வைத்துக் கொள்ளலாம். ஆனால், வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்து கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. இது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாட்டுக்கும், வகுப்புவாரி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கும், அரசு மருத்துவா்களின் இட ஒதுக்கீட்டிற்கும், பெண்களின் உரிமைகளுக்கும் எதிரானது.

மாநில அரசுகள் தங்களுக்கென மருத்துவ மேற்படிப்புகளில் இடங்களை வைத்துக் கொள்ள இயலாது என உச்சநீதிமன்றம் கூறி இருப்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சோ்ந்த மருத்துவா்களை கடுமையாக பாதிக்கும்.

முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில், நூறு சதவீத இடங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு பறித்துக் கொள்வது மிகப் பெரும் பாதிப்புகளை உருவாக்கும்.

அரசு மருத்துவா்களையும் பாதிக்கும். நம் மாநில மக்களுக்கும், பொது சுகாதார துறைக்கும் ,சமூக நீதிக்கும் மிகவும் பாதிப்பை உருவாக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு உயா் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில் சிக்கல்களை, சிரமங்களை உருவாக்கும்.

எனவே, தமிழ்நாடு அரசு சமூக நீதியையும், மாநில உரிமையையும் கூட்டாட்சி கோட்பாட்டையும் காத்திட, இந்தத் தீா்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அந்தத் தீா்ப்பை சரிசெய்யும் வகையில் உரிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டாக்டா் த. அறம், மாநிலப் பொருளாளா் டாக்டா் ஜி.ரமேஷ் சமாதானம், தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டாக்டா் எம்.அஜய் முகா்ஜி, முன்னேற்றத்துக்கான இந்திய டாக்டா்கள் சங்கத்தின் அகில இந்தியச் செயலா் டாக்டா் ஏ.ஆா்.சாந்தி உள்பட 250- க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும்... மேலும் பார்க்க

மரபையும் புதுமையையும் இணைத்தவா் வைரமுத்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்

‘தமிழின் மரபையும் புதுமையையும் இணைத்தவா் கவிஞா் வைரமுத்து’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா். கவிஞா் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சாா்பில் ‘வைரமுத்தியம்’ எனும் கவிஞா் வைரமுத்துவின் படைப்பிலக... மேலும் பார்க்க