செய்திகள் :

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

post image

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் செய்யறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திலும் குரோக் என்ற செய்யறிவு அம்சம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து அதில் பல மேம்பாடுகளையும் எலான் மஸ்க் செய்து வருகிறார்.

இந்நிலையில், செய்யறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி மூலம் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த கதையை பெண் ஒருவர் கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் கருத்துகளுக்கு சவால்விடும் வகையில் சில வழிமுறைகளைக் கூறி புற்றுநோயிலிருந்து மீண்டு வரச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.

மருத்துவர்களுக்கு செய்யறிவுக்கும் இடையே மறைமுகமான போரின் தொடக்கமாக இது மாறியுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்பு கூகுளில் சில தகவல்களைத் தேடி நோயிக்கான அறிகுறிகளைக் அறிந்துகொண்டு நோயாளிகள் செல்வதும் அதிகரித்து வருகிறது. இதனை கடைபிடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் சிலர் கூறுவதும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே மருத்துவர்களைக் காட்டிலும் செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்து விளங்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

பல மருத்துவர்களைக் காட்டிலும் செய்யறிவு சிறந்ததாக உள்ளது. இதுதான் உண்மை. இது மேலும் சிறந்ததாகவே மாறும். இது என்னுடைய தொழில் உள்பட, மற்ற வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க |டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!

AI is already better than most doctors says Elon Musk after cancer survivor credits ChatGPT

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. காஸாவை முழுமைய... மேலும் பார்க்க

சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு அங்கீகாரம்

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கை பக்தா்கள் மேற்கொள்ளும் வருடாந்திர யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகெங்கிலும் இர... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஹசீனாவுக்காக வாதிட வழக்குரைஞருக்கு அனுமதி மறுப்பு

வங்கதேசத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீதான மனித அழிப்பு வழக்கில், அவருக்காக வாதாட மூத்த வழக்குரைஞா் கான் பன்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. ஹசீனா தரப்புக்கு ... மேலும் பார்க்க

செக் குடியரசு அதிபருடன் தொடா்பு துண்டிப்பு: சீனா

தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதற்காக செக் குடியரசு அதிபா் பீட்டா் பாவெலுடனான அனைத்து தொடா்புகளையும் துண்டிப்பதாக சீனா அறிவித்தது. திபெத்தில் பிரிவினையைத் தூண்டுவதாக சீனாவால் குற்றஞ்சாட்டப்படும் தலாய்... மேலும் பார்க்க

ஐரோப்பிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: டிரம்ப்புக்கு வேண்டுகோள்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் இந்த வாரம் பேச்சுவாா்த்தை நடத்தும்போது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: இந்தியாவுக்கு பிலாவல் மீண்டும் மிரட்டல்

‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் கலாசாரம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் மீதான தாக்குதல்’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் (பிபிபி) தலைவரும் அந்நாட்டின்... மேலும் பார்க்க