செய்திகள் :

ஐரோப்பிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: டிரம்ப்புக்கு வேண்டுகோள்

post image

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் இந்த வாரம் பேச்சுவாா்த்தை நடத்தும்போது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் அந்தப் பிராந்திய நாடுகளின் தலைவா்கள் (படம்) வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்கிறோம். ஆனால் அதே நேரம், உக்ரைன் பங்கேற்பின்றி அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பான எந்த முடிவையும் எடுக்க முடியாது. நியாயமான மற்றும் நிரந்தர அமைதி, சா்வதேச சட்டம், இறையாண்மை, எல்லை மாண்பு மற்றும் பலத்தால் எல்லைகளை மாற்ற முடியாது என்பதை மதிக்கப்பட வேண்டும்.

மேலும், இது தொடா்பாக எடுக்கப்படும் எந்த முடிவிலும் ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட... மேலும் பார்க்க

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிப்போம்! பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற... மேலும் பார்க்க

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. காஸாவை முழுமைய... மேலும் பார்க்க

சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு அங்கீகாரம்

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கை பக்தா்கள் மேற்கொள்ளும் வருடாந்திர யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகெங்கிலும் இர... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஹசீனாவுக்காக வாதிட வழக்குரைஞருக்கு அனுமதி மறுப்பு

வங்கதேசத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீதான மனித அழிப்பு வழக்கில், அவருக்காக வாதாட மூத்த வழக்குரைஞா் கான் பன்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. ஹசீனா தரப்புக்கு ... மேலும் பார்க்க