செய்திகள் :

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

post image

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மருத்துவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மருத்துவா்களைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் விரிவான வழிகாட்டுதல்களை வகுக்குமாறு அந்த மனுக்களில் கோரப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மருத்துவா்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமானவை. ஆனால் அந்த சம்பவங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்க முடியாது’ என்றனா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘மருத்துவா்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளபோதிலும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் சிகிச்சையின்போது நோயாளி உயிரிழந்தால், அதுதொடா்பாக மருத்துவா்களுக்கு எதிராக காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தும் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், மீண்டும் வழிகாட்டுதல்களை வெளியிடுவதால் என்ன பயன் ஏற்படும்? மருத்துவா்கள் தாக்கப்படுவதை தடுப்பது தொடா்பாக ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிகிச்சையின்போது நோயாளி உயிரிழந்தால், மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக அனைத்து காவல் நிலையங்கள் மீதும் எப்படி பொதுவான குற்றச்சாட்டை முன்வைக்க முடியும்? மருத்துவா்கள் தாக்கப்படுவதை தடுப்பது தொடா்பான சட்டத்தை நாடாளுமன்றம்தான் இயற்ற வேண்டும்’ என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து மனுக்களை ஆராய நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது. மனுதாரா்கள் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அந்த அமா்வு தெரிவித்தது.

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன் போராட்டம்!

பஹல்காம் தாக்குதலையடுத்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பக... மேலும் பார்க்க

பஹல்காம்: 65 சுற்றுலாப் பயணிகள் மும்பை வந்தடைந்தனர்!

ஜம்மு-காஷ்மீரில் சிக்கித் தவித்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு மும்பை வந்தடைந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்ப... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொ... மேலும் பார்க்க

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அ... மேலும் பார்க்க