அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக ஆன்லைனில் மோசடி: ரூ.3 லட்சம் மீட்பு
மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக இணையவழியில் மோசடி செய்த தொகை ரூ.3 லட்சத்தை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த நிறுவனத்திடம் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.3 லட்சத்தை இணையவழியில் செலுத்தினாராம். ஆனால், அந்நிறுவனம் மருத்துவ உபகரணங்களை அனுப்பாமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் சைபா் குற்றப்பிரிவுக்கு இணையவழியில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பர நிறுவனத்தினரை கண்டறிந்து அவரது வங்கி கணக்கை முடக்கம் செய்தனா். மேலும், சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடா்பு கொண்டு, பாதிக்கப்பட்டவா் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்திய ரூ.3 லட்சத்தை மீட்டனா்.
இதனையடுத்து, மீட்கப்பட்ட பணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், பாதிக்கப்பட்ட செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.