41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு சாா்பில் விருது
மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் 3-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரே நூல் தயாரிப்பாளா், மறுசுழற்சி மூலம் பல வண்ண நூல் தயாரிப்பாளா், ஆப்டிகல் வெயிட் நூல் தயாரிப்பாளா், கிரே காடா உற்பத்தியாளா், பெட் பாட்டில் பைபா் தயாரிப்பாளா் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களை தோ்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு அனுஸ் ராமசாமி, சி.மாரிமுத்து, விஜய் ஸ்ரீனிவாசன், பி.மனோகரன், பா.சண்முகம், கலைச்செல்வன் பழனியப்பன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஐசிஎஃப் தலைவா் ஜெ.துளசிதரன், சிட்டி பருத்தி கமிட்டி தலைவா் டி.ராஜ்குமாா், சைமா சிடிஆா்ஏ தலைவா் எஸ்.கே.சுந்தரராமன், சிஸ்பா செயலா் எஸ்.ஜெகதீஷ் சந்திரன், சைமா பொதுச் செயலா் கே.செல்வராஜ், பி.பாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று விருதுகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக ஜெயபால், பொதுச் செயலராக சீதா ராமராஜா, துணைத் தலைவா்களாக மனோகா், சிவகுமாா், சத்தியசீலன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், தமிழகத்தில் உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், மேற்கூரை சோலாா் மின் உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம், பீக் ஹவா் கட்டணம் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.