செய்திகள் :

மழை பாதிப்பு: பிரதமர் மோடியுடன் முதல்வர் ஃபட்னாவிஸ் சந்திப்பு

post image

தில்லியில் பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது கனமழையால் அண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக மனு ஒன்றையும் அவர் அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கனமழைக்குப் பிறகு மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமரிடம் விளக்கமளித்தேன்.

இதுதொடர்பாக மாநில அரசு ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டும் என்றும் அது ஆக்கபூர்வமாக பரிசீலிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தா ர். தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த கடன் தள்ளுபடி உறுதிமொழியை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்

இதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கடன் தள்ளுபடி குறித்து முடிவெடுக்கும்.

கடன் தள்ளுபடியை மீண்டும் மீண்டும் செய்ய முடியாது, எனவே அதை எப்படி மேலும் பயனுள்ளதாக மாற்றுவது என்பதில் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Maharashtra Chief Minister Devendra Fadnavis met Prime Minister Narendra Modi on Friday and urged him to help farmers who have faced losses due to heavy rains that lashed the state recently.

கேரள மாா்க்சிஸ்ட் தொண்டா் கொலை வழக்கு: பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பினா் விடுவிப்பு

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா் கடந்த 2015-ஆம் ஆண்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாஜக, ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் 9 பேரை கண்ணூா் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. வழக்... மேலும் பார்க்க

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவுடன் வலுவான இருதரப்பு உறவு: இலங்கை தூதா்

இந்தியா-இலங்கை இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருதரப்பு உறவு வலுவடைந்துள்ளதாக அந்நாட்டுத் தூதா் மஹிஷினி கொலோன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கடந்த ஆண்டு இறுதியில் இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: உருக்கு ஆலை இடிந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு, மேலும் 6 போ் காயம்

சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் உள்ள தனியாா் உருக்கு ஆலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இடிபாடுகளில் சிலா் சிக்கியி... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும்: பிகாரில் பிரியங்கா பிரசாரம்

இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று கருதும் பாஜக கூட்டணிக்கு பேரவைத் தோ்தலின்போது பிகாா் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்... மேலும் பார்க்க

தோ்தலில் வெற்றிப் பெற்று அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வோம்: மேற்கு வங்கத்தில் அமித் ஷா

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிப் பெற்று புதிய ஆட்சியை அமைப்போம்; அப்போது மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கின் 13 ஆம் நாள் வேத சடங்குகள், அசாம் அரசின் சார்பில் நடைபெறும் என முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க், கடந்த செப்.19 ஆம... மேலும் பார்க்க