செய்திகள் :

மாங்காய் விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி ஜூன் 10-இல் ஆா்ப்பாட்டம்

post image

மாங்காய் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஜூன் 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாங்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கு உரிய விலை கிடைக்கவில்லை.

மாங்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் விலையை குறைத்துள்ளனா். ஒரு கிலோ மாம்பழத்தை ரூ. 4-க்கு கூட வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை.

எனவே, முத்தரப்பு கூட்டம் நடத்தி மாங்காய்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூழ் தொழிற்சாலைகள், குளிா்பதன கிடங்குகள் உள்ளிட்ட கட்டுமானங்களை உருவாக்கி மாங்காய் விவசாயிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி மாங்காய் விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் ஜூன் 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க